தாமரை குளத்தில் தூய்மை பணி


தாமரை குளத்தில் தூய்மை பணி
x
தினத்தந்தி 11 March 2023 7:00 PM GMT (Updated: 11 March 2023 7:00 PM GMT)

தாமரை குளத்தில் தூய்மை பணி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை நகராட்சி சார்பில் தாமரை குளத்தில் மாபெரும் தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வைத்தார். இதை மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார். தொடர்ந்து தூய்மையான நகராட்சியை உருவாக்குவது குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் நகரசபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சேவை அமைப்பினர், 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story