ஓட்டல் சாம்பாரில் கரப்பான்பூச்சி


ஓட்டல் சாம்பாரில் கரப்பான்பூச்சி
x

ராமேசுவரத்தில் ஓட்டல் சாம்பாரில் கரப்பான்பூச்சி கிடந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் கோவிலின் வடக்கு ரதவீதி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது ஓட்டலில் சமையல் செய்யும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் கரப்பான் பூச்சி அதிகம் இருப்பதை பார்த்தனர் அப்போது ஓட்டல் பொறுப்பாளரிடம் இனி இதுபோன்று உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் வராத அளவிற்கு தூய்மையாக வைத்திருந்து சமையல் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். ராமேசுவரம் கோவில் அருகே ஓட்டல் ஒன்றில் பக்தர்கள் சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story