ரூ.57 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.57 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
திருப்பூர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்., நேற்று 141 விவசாயிகள் கலந்து கொண்டு 72 ஆயிரத்து 473 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.85.40-க்கும், குறைந்தபட்சம் ரூ.71-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.57 லட்சத்து 48ஆயிரத்து 95க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.


Next Story