ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம் ரூ.88¾ லட்சம் வசூல்


ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம் ரூ.88¾ லட்சம் வசூல்
x

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம் ரூ.88¾ லட்சம் வசூலானது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருடமண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.88 லட்சத்து 79 ஆயிரத்து 682

ரொக்கமும், 175 கிராம் தங்கமும், 946 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 162-ம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story