வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது


வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு  அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது

தர்மபுரி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மழைக்காலங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதோடு பேரிடர் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள், நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள், குறைவான அளவு பாதிப்பு ஏற்படகூடிய இடங்கள் ஆகியவற்றை கண்டறிய வேண்டும். இந்த இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உரிய நேரத்தில் பணியில் இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், உதவி கலெக்டர் விஸ்வநாதன், கலாம் உதவி ஆணையர் தணிகாசலம், கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ரமேஷ் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story