கல்லூரி மாணவன் சாதனை


கல்லூரி மாணவன் சாதனை
x

ஆணழகன் போட்டியில் கல்லூரி மாணவன் சாதனை படைத்தார்.

விருதுநகர்

சிவகாசி,

தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் ஆணழகன் போட்டி சிவகாசியில் நடைபெற்றது. இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர். என்ஜினியரிங் கல்லூரி மாணவன் ஜெயகணேஷ் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ், பேராசிரியை கிருஷ்ணவேனி மற்றும் பலர் பாராட்டினர்.


Related Tags :
Next Story