விபத்தில் கல்லூரி மாணவர் பலி


விபத்தில் கல்லூரி மாணவர் பலி
x

காரியாபட்டி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பள்ளத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 20). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் அவர் தேர்வு எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார். காரியாபட்டி அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பணிகள் நடப்பதால் ஒருவழிபாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கார்த்திக்ராஜா இந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது காரியாபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக கார்த்திக்ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story