மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் வாலிபர் பலியானார்.

திருச்சி

லால்குடி, செப்.22-

லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வல்லரசு (வயது 21). இவர் லால்குடியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் லால்குடி அருகே தெங்கால் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். இதேபோல் லால்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் அனீஷ் (17) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தார். இருவரது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் வல்லரசு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதற்கிடையே படுகாயத்துடன் சாலையில் கிடந்த அனீஷ் கால்களில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் ஏறி இறங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story