கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 6:45 PM GMT (Updated: 12 Oct 2022 6:46 PM GMT)

குறும்பலாபேரியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. சமூக நலன் மற்றும் கீழப்பாவூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவி முத்துமாலையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு, விழிப்புணர்வு புத்தகம், சீர்வரிசை பொருட்கள் வழங்கி, வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் மங்களநாயகி, மேற்பார்வையாளர்கள் கற்பகவள்ளி, மல்லிகா, வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story