புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் சமீபகாலமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது குறுக்கிடுவதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதீஸ்குமார், தொண்டி.

சேதமடைந்த மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் இறால் பண்ணைக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது.மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேஷ், எஸ்.பி.பட்டினம்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகராஜ், ராமநாதபுரம்.

கரடு முரடான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி பஸ் நிறுத்தம் செல்லும் சாலை கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் பாதசாரிகள், வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெருநாளி.

வாகன காப்பகம் தேவை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தகுந்த இடவசதி இல்லாமல் அவதியடைகின்றனர். வாகனஓட்டிகள் சிலர் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன காப்பகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநாவுக்கரசு, தொண்டி.


Next Story