கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x

அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் தாலுகா வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தாசில்தார் சண்முக சுந்தரம் விவசாய கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுயுடைய அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தலைமையிடத்து துணை தாசில்தார் சமரபுரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபால், பிள்ளையார், யுவராணி, குழந்தை தெரேசா, கிராம நிர்வாக அலுவலர்கள் நெடுஞ்செழியன், ராஜேஷ், லட்சுமி நாராயணன், கார்த்தி, கலைவாணன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story