நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 28-ந் தேதி முதல் தொடர் ரெயில் மறியல்


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 28-ந் தேதி முதல் தொடர் ரெயில் மறியல்
x

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வருகிற 28-ந்தேதி முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என செல்வராஜ் எம்.பி. கூறினார்.

திருவாரூர்

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வருகிற 28-ந்தேதி முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என செல்வராஜ் எம்.பி. கூறினார்.

பேட்டி

திருவாரூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நாகை எம்.பி. செல்வராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரெயில்கள் குறித்த கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் தென்னக ரெயில்வே, அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுத்தி, நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் டெல்டா பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த பகுதியை தென்னக ரெயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள்.

ரெயில் மறியல் போராட்டம்

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரெயில்வேயை கண்டித்து கடந்த 21-ந் தேதி ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஒருமித்தமாக முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 21-ந் தேதி தமிழக முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு மாநில கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதனால் அந்த தேதி நடைபெற இருந்த ரெயில் மறியல் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் கோரிக்கை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து நடைபெறும்.

10 ஆயிரம் பேர் பங்கேற்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென விவசாயிகள் ஓராண்டு போராடிய பிறகு அந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதேபோல டெல்டா பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேறும் வரை இந்த ரெயில் மறியல் தொடர் போராட்டமாக நடைபெறும்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 28-ந் தேதி காலை 9 மணி அளவில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள், எம்.எல்.ஏக்கள், ரெயில் உபயோகிப்பார்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் தொடங்க உள்ளது.

4 இடங்களில் நடக்கிறது

திருவாரூரில் 3 இடங்கள் மற்றும் நாகப்பட்டினத்தில் ஒரு இடம் என மொத்தம் 4 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். ெரயிலை இயக்குவதற்கு நாங்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். இந்த போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி என்று பாகுபாடு பார்க்காமல்,அனைவரும் ஒன்றுபட்டு கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story