விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அய்யம்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (வயது50). தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சின்னையன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story