சேலம் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்   36 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 20 பேர், எடப்பாடி மற்றும் கொளத்தூரில் தலா 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர் மற்றும் காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story