ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.68½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.68½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 8 Jun 2022 6:30 PM GMT)

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.68 லட்சத்து 69 ஆயிரத்து 440-க்கு பருத்தி ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,389-க்கு விலை போனது.

திருவாரூர்

திருவாரூர்:

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அறுவடை செய்யப்பட்ட பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.68½ லட்சத்துக்கு ஏலம்

அப்போது விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வியாபாரிகள் தரம்பார்த்து தாங்கள் கேட்கும் தொகையினை சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர். பினனர் திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டி திறக்கப்பட்டு வியாபாரிகள் கேட்ட விலை படிக்கப்பட்டது.அதில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால பருத்தி ரூ.11,389-க்கும், குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 45-ம் ஏலம் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 419-க்கு பருத்தி பஞ்சு விற்பனையானது. மொத்தம் ரூ.68 லட்சத்து 69 ஆயிரத்து 440-க்கு பருத்தி ஏலம் போனது. இந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story