தென்னிலை அருகே கொரியர் சரக்கு வேன் மீது லாரி மோதல் - டிரைவர் பலி


தென்னிலை அருகே கொரியர் சரக்கு வேன் மீது லாரி மோதல் - டிரைவர் பலி
x

தென்னிலை அருகே கொரியர் சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

தென்னிலை,

விருதுநகர் மாவட்டம் திருத்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 23). இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடன் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த சாம்பான் (31). என்பவர் சரக்கு வேனில் கொரியர் பார்சல்களை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தென்னிலை அருகே காட்டு முன்னூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பிரிவு சாலையிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வெளியே வந்த லாரி வேகமாக கொரியர் சரக்கு வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கொரியர் வேன் டிரைவர் மோகன் மற்றும் சாம்பன் இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். சாம்பன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வேடசந்தூர் லந்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(வயது 43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story