மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் செத்தன


மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் செத்தன
x
தினத்தந்தி 3 Jun 2023 4:30 AM GMT (Updated: 3 Jun 2023 7:12 AM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 மாடுகள் செத்தன.

பசுமாடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமாதையன், விவசாயி. இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலம் அருகே அவரது 4 பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கிருந்த மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. அதில் இருந்த மின் கம்பிகள் அறுந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கி 4 பசு மாடுகளும் பரிதாபமாக இறந்தன.

போலீசார் விசாரணை

இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் மின்சார தொடர்பை துண்டித்து மின்கம்பிகளை அகற்றினர். பின்னர் பசு மாடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story