சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்


சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
x

சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான வயலில் அரசு அனுமதி பெற்று சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். அதில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story