ஓசூர் அருகேசாலையோரம் மயங்கி கிடந்தவர் சாவு


ஓசூர் அருகேசாலையோரம் மயங்கி கிடந்தவர் சாவு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே உள்ள மோரனப்பள்ளி காளி கோவில் அருகில் சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story