ஓசூரில்வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பரிதாப சாவு


ஓசூரில்வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பரிதாப சாவு
x

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் இறந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் இறந்தனர்.

தொழிலாளி

ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள பெருமாள் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் ஓசூர் முல்லை நகர் அரசு பள்ளி அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர்

சூளகிரி தாலுகா உல்லட்டியை சேர்ந்தவர் முனியப்பா (83). இவர் நேற்று முன்தினம் கொல்லப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில், நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முனியப்பா படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடிசா வாலிபர்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜித் முலி (25). இவர் பாகலூர் அருகே சூடாபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவரும், பாகலூர் தேர்பேட்டையை சேர்ந்த சோமலிங்கப்பா (40) என்பவரும் ஸ்கூட்டரில் மாலூர்-பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அஜித் முல்லி, சோமலிங்கப்பா ஆகியோர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அஜித் முல்லி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சோமலிங்கப்பா ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story