சேலம் களரம்பட்டியில்தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் சாவு


சேலம் களரம்பட்டியில்தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் சாவு
x

சேலம் களரம்பட்டியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் இறந்தார்.

சேலம்

சேலம்

சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 30). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி (26). இவர்களது வீட்டில் தரை மட்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த நிலையில் மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மகேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் விரைந்து சென்று மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story