சேலம் அருகேரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவுயார் அவர்? போலீஸ் விசாரணை


சேலம் அருகேரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவுயார் அவர்? போலீஸ் விசாரணை
x

சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

சேலம்

சேலம்

மங்களூரு-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரெயில் சேலம் அருகே டேனிஷ்பேட்டை-லோக்கூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது கதவு பகுதியில் நின்று கொண்டிருந்த அவர் ரெயிலில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story