பனமரத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆபரேட்டர் சாவுமனைவி கண் முன்னே சோகம்


பனமரத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆபரேட்டர் சாவுமனைவி கண் முன்னே சோகம்
x

பனமரத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மனைவி கண் முன்னே ஆபரேட்டர் இறந்தார்.

சேலம்

பனமரத்துப்பட்டி

பனமரத்துப்பட்டி அருகே உள்ள அடிக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் சேலம் எருமாபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை சதீஷ்குமார் தனது மனைவி நந்தினியுடன் (23) மோட்டார் சைக்கிளில் வாழப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது அவர்கள் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு ஆதிபராசக்தி கோவில் அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் மனைவி கண் முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நந்தினி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மனைவி கண் முன்னே கணவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story