தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் சாவு


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் சாவு
x

மாரண்டஅள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி, ஜூன்.30-

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கடத்திக்கொள்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி இவர்களது மகன் தர்ஷன் (வயது 3). சிறுவன் தனது அக்காள் வீட்டிற்கு விளையாட சென்றான். அப்போது வீட்டின் அருகே உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான். இதுகுறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்று சிறுவன் தர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story