பிறந்த 20 நாளில் ஆண் குழந்தை சாவு


பிறந்த 20 நாளில் ஆண் குழந்தை சாவு
x

பாலக்கோடு அருகே பிறந்த 20 நாளில் ஆண் குழந்தை இறந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது35). தொழிலாளி. இவருடைய மனைவி தேன்மொழி. இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பாலக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அங்கு குழந்தை சோர்வடைந்ததால் பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story