மின்சாரம் தாக்கி விவசாயி சாவு


மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
x

மத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே குள்ளம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 64). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின் வயரில் அவரது கை உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story