தீயில் கருகி தொழிலாளி சாவு


தீயில் கருகி தொழிலாளி சாவு
x

வேப்பனப்பள்ளி அருகே தீயில் கருகி தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 65). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மண்எண்ணெய் விளக்கு அவர் மீது தவறி விழுந்து உடலில் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகி படுகாயம் அடைந்த சின்னப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story