வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

பர்கூர், சூளகிரி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர், சூளகிரி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.

பிளம்பர்

பெங்களூரு கொரப்பனபாளையா பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 47). பிளம்பர். இவர் கடந்த 17-ந் தேதி பர்கூருக்கு வந்தார். பின்னர் அவர் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரகுப்பம் மேம்பாலம் அருகில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மனோகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (36) பெயிண்டர். இவர் வேலை நிமித்தமாக சூளகிரிக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story