பஸ் மோதி மூதாட்டி சாவு


பஸ் மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

பர்கூர் அருகே பஸ் மோதி மூதாட்டி இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சின்னதாய் (வயது 62). இவர் கடந்த 23-ந் தேதி இரவு தேசிய நெடுஞ்சாலையில் குருவிநாயனப்பள்ளியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story