ஓசூரில்வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


ஓசூரில்வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 April 2023 7:00 PM GMT (Updated: 27 April 2023 10:30 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

டிரைவர்

கர்நாடக மாநிலம் பாகல்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கங்கப்பா குரிகர் (வயது 38). இவர் ஓசூரில் மத்திகிரி அருகே அந்திவாடியில் தங்கி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 24-ந் தேதி இரவு ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்றவர் கங்கப்பா குரிகர் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த கங்கப்பா குரிகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலி

ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சானமாவு வனப்பகுதியையொட்டி 40 முதல் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கடந்த 25-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story