விழுப்புரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


விழுப்புரத்தில்  ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

விழுப்புரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் சித்தேரிக்கரை ரெயில்வே தண்டவாள பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது சட்டைப்பையில் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்வதற்காக எடுக்கப்பட்டிருந்த பயணச்சீட்டு மட்டும் இருந்தது. மற்ற எந்தவொரு அடையாள அட்டையும் இல்லாததால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story