கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

மதுரையில் கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

மதுரை முனிச்சாலை 1-வது மெயின் தெருவில் வசித்து வந்தவர் குமரன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் முதல் மாடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென்று குமரன் மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story