கடலில் தவறி விழுந்த வாலிபர் சாவு


கடலில் தவறி விழுந்த வாலிபர் சாவு
x

கடலூர் துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மகன் சரவணன் (வயது 35). இவர் கடலூர் கூத்தப்பாக்கத்தில் பேட்டரி கடை வைத்து நடத்தி வந்தார். சரவணன், கடலூர் துறைமுகம் பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கடலில் தவறி விழுந்து சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story