டெம்போ மோதி கட்டிட தொழிலாளி சாவு


டெம்போ மோதி  கட்டிட தொழிலாளி சாவு
x

பூதப்பாண்டி அருகே டெம்போ மோதி கட்டிட தொழிலாளி இறந்தார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே டெம்போ மோதி கட்டிட தொழிலாளி இறந்தார்.

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் காலனி அந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் செல்வ கணேஷ் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். நாவல்காடு பகுதியை சென்றடைந்த போது அந்த வழியாக வந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வ கணேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story