பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:46 PM GMT)

சின்னமனூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதவு செய்தனர்.

தேனி

சின்னமனூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ஹேம லட்சுமி (வயது 40). இவரிடம், சின்னமனூரை சேர்ந்த சிங்காரவேலன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசில் ஹேமலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் சிங்காரவேலன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story