சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்வு


சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:45 PM GMT)

புதுக்கடை அருகே நடந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே நடந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

முதியவர் சாவு

புதுக்கடை அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 84). இவர் நேற்று முன்தினம் மாலையில் ஐரேனிபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜாமணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனே அருகில் இ்ருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜாமணி பரிதாபமாக இறந்தார்.

2 ஆக உயர்வு

அதே சமயம் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சடையன்குழி பகுதியை சேர்ந்த கவிராஜ் (52) என்பவரும் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கவிராஜ் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story