விடுமுறை நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்


விடுமுறை நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
x

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றைய தினம் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

அந்த வகையில் இன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு, பின்னர் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நாழிக்கிணறு, வள்ளி குகை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடல் அலைகளில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.




Next Story