திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கடந்த ஆவணி 1-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை கிராமத்தின் ஏரிக்கரையில் அரவான் கடபலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரவுபதி அம்மன் தீக்குழி முன்பு எழுந்தருளினார். பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.


Next Story