2 வயது குழந்தை திடீர் சாவு


2 வயது குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:30 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பாகலூர் அருகே மோதுகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 2). இந்த குழந்தை நேற்று முன்தினம் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை வழியிலேயே இறந்து விட்டது. இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story