திமுக முப்பெரும் விழா: மலை வடிவத்தில் பிரம்மாண்ட பந்தல்...!


திமுக முப்பெரும் விழா: மலை வடிவத்தில் பிரம்மாண்ட பந்தல்...!
x

விருதுநகரில் நாளை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்,

விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணா நகரில் அமைந்துள்ள கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், கழக முன்னோடிகளுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் விழா சிறப்பாக நடைபெற நெருக்கடிகளிலும், சோதனைகளிலும் தி.மு.க.வை கட்டி காத்த கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளை உங்களில் ஒருவனாக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முப்பெரும் விழா நடைபெறும் கலைஞர்திடலில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

விழாவில் கலந்து கொள்வோருக்கான அடிப்படை வசதிகள் செய்வதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் பிரமாண்ட பந்தல் முன்பு மலை போன்று வடிவமைக்கப்பட்டு முக்கிய தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது.


Next Story