குடும்ப பிரச்சினையால்விஷம் தின்று பெண் தற்கொலை முயற்சி


குடும்ப பிரச்சினையால்விஷம் தின்று பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 5:33 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் குடும்ப பிரச்சினையால் விஷம் தின்று பெண் தற்கொலைக்கு முயன்றார்.

தேனி

கம்பம் கோம்பை ரோடு தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சபீனா (வயது 23). இந்த தம்பதிக்கு தர்ஷன் என்ற மகனும், தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சபீனா கோபித்து கொண்டு தனது குழந்தைகளை தனது தாயார் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி சபீனா வீட்டில் இருந்தபோது தெருவில் விளையாடிய அவரது குழந்தைகளை வீரபத்திரன் அழைத்து சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சபீனா, கணவரின் வீட்டிற்கு சென்று குழந்தைகளை கேட்டார். அப்போது அங்கிருந்த சபீனாவின் மாமியார் சிட்டம்மாள் மற்றும் அவரது மகள்கள் முருகேஸ்வரி, ரஞ்சிதம் ஆகியோர் குழந்தைகளை தர முடியாது என்றதுடன், அவரை தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சபீனா நேற்று முன்தினம் ஊத்துக்காடு நாககன்னியம்மன் கோவில் அருகே உள்ள செடியில் இருந்த அரளி விதையை (விஷம்) பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சபீனா கொடுத்த புகாரின் பேரில் சிட்டம்மாள், அவரது மகள்கள் முருகேஸ்வரி, ரஞ்சிதம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story