நீர்வரத்து சீரானதால்சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


நீர்வரத்து சீரானதால்சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தேனி

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாரல் மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அருவியில் நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வனத்துறையினர் நீர்வரத்து குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story