முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

பாளையங்கோட்டை அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தாலுகா தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 64). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாம். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story