முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

வடக்கன்குளம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அடுத்த பழவூர் அருகே உள்ள மதகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). இவருக்கும், இவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு, அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பெருமாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story