முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

முதியவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

அனந்தநாடார்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் (வயது 65). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மன உளைச்சலில் இருந்தார். இந்தநிலையில் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்து (விஷத்தை) எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோகன் இறந்தார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story