முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

வீரவநல்லூரில் முதியவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் ஊர்சூழ்ந்த விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிதம்பர வேல் (வயது 65). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story