மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு


மதுக்கூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிழந்தார்.

தஞ்சாவூர்

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை கோட்டைதெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது44). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று மதுக்கூர் அருகே உள்ள கண்டியங்காடு பற்குனநாதர் சிவன் கோவிலில் எலக்ட்ரிகல் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுக்கூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாலமுருகனுக்கு சுபா என்ற மனைவியும், 8வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.


Next Story