மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி
x

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி

தஞ்சாவூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கோவிந்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது30). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் துணை மின்நிலையத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை மலர்மன்னன் அருமலை கிராமத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மலர்மன்னனை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மலர்மன்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாநாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story