என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை


என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM GMT (Updated: 23 Oct 2022 6:46 PM GMT)

கயத்தாறு அருகே என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 24). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு படித்து முடித்துள்ளார். இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story