செட்டியாபத்தில் சமத்துவ பொங்கல்விழா


செட்டியாபத்தில் சமத்துவ பொங்கல்விழா
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

செட்டியாபத்தில் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் தாங்கையூர்மியா வாக்கியா காட்டில் சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி தலைமை வகித்து சமத்துவ பொங்கலிட்டு 500 பேருக்கு வேஷ்டி, சேலை, அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா, உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உடன்குடி பேருராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story